குறள் 590

குறள் 590:

 

சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யிற் 
புறப்படுத்தான் ஆகும் மறை
மு.வ உரை:
ஒற்றனிடத்தில் செய்யும் சிறப்பைப் பிறர் அறியுமாறு செய்யக்கூடாது, செய்தால் மறைபொருளைத்தானே வெளிப்படுத்தியவன் ஆவான்.
சாலமன் பாப்பையா உரை:
மறைவாக நிகழ்வனவற்றைஅறிந்து சொல்லும் ஒற்றருக்குப் பரிசு தருக; மறைவாகவே தருக; ஊர் அறியத் தருவது மறைவையும் ஒற்றரையும் தானே வெளிப்படுத்தியது போல் ஆகும்.
கலைஞர் உரை:

ஓர் ஒற்றரின் திறனை வியந்து பிறர் அறியச் சிறப்புச் செய்தால், ஒளிவு மறைவாக இருக்கவேண்டிய செய்தியை, வெளிப்படுத்தியதாகிவிடும்.


Kural 590


Sirappariya Otrinkan Seiyarka Seiyin
Purappaduththaan Aagum Marai

Kural Explanation: Let not a king publicly confer on a spy any marks of his favour; if he does, he will divulge his own secret

Leave a Comment