குறள் 547

குறள் 547:

 

இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை 
முறைகாக்கும் முட்டாச் செயின்
மு.வ உரை:
உலகத்தை எல்லாம் அரசன் காப்பாற்றுவான், நீதிமுறை கெடாதவாறு ஆட்சி செய்வானாயின் அரசனை அந்த முறையே காப்பாற்றும்.
சாலமன் பாப்பையா உரை:
ஆட்சியாளர் பூமியைக் காப்பர்; அவரையோ அவரது குறையற்ற நேர்மையான ஆட்சி காக்கும்.
கலைஞர் உரை:

நீதி வழுவாமல் ஓர் அரசு நடைபெற்றால் அந்த அரசை அந்த நீதியே காப்பாற்றும்.


Kural 547


Iraikaakkum Vaiyagam Ellaam Avanai
Muraikaakkum Muttaa Cheyin

Kural Explanation: The king defends the whole world; and justice, when administered without defect, defends the king

Leave a Comment