குறள் 537

குறள் 537:

 

அரியவென் றாகாத இல்லைபொச் சாவாக்
கருவியாற் போற்றிச் செயின்
மு.வ உரை:
மறவாமை என்னும் கருவிகொண்டு (கடமைகளைப்) போற்றிச் செய்தால், செய்வதற்கு அரியவை என்று ஒருவனால் முடியாத செயல்கள் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
மறதி இல்லாத மனத்தால் எண்ணிச் செய்தால் ஒருவருக்குச் செய்ய முடியாதது என்று எதுவும் இல்லை.
கலைஞர் உரை:

மறதியில்லாமலும், அக்கறையுடனும் செயல்பட்டால், முடியாதது என்று எதுவுமே இல்லை.


Kural 537


Ariyaven Ragaadha Illaipoch Chaavaa
Karuviyaar Potri Cheyin

Kural Explanation: There is nothing too difficult to be accomplished, if a man set about it carefully, with unflinching endeavour

Leave a Comment