குறள் 469

குறள் 469:

 

நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை
மு.வ உரை:
அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும்.
சாலமன் பாப்பையா உரை:
அவர் அவர் குணநலன்களை அறிந்து செயல் ஆற்றாவிட்டால் நல்லது செய்வதிலும் பிழை நேர்ந்து விடும்.
கலைஞர் உரை:

ஒருவருடைய இயல்பைப் புரிந்து கொண்டுதான் நன்மையைக் கூடச் செய்ய வேண்டும் இல்லாவிட்டால் அதுவே தீமையாகத் திருப்பித் தாக்கும்.


Kural 469


Nandraatra Lullun Thavurundu Avaravar
Panbarin Thaatraa Kadai

Kural Explanation: There are failures even in acting well, when it is done without knowing the various dispositions of men

Leave a Comment