குறள் 434

குறள் 434:

 

குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் தரூஉம் பகை
மு.வ உரை:
குற்றமே ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் பகையாகும், ஆகையால் குற்றம் செய்யாமல் இருப்பதே நோக்கமாகக் கொண்டு காத்துக் கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
அரசிற்கு அழிவுதரும் பகை மனக்குற்றந்தான். அதனால் அக்குற்றம் தன்னிடம் வராமல் காப்பதையே பொருளாகக் கொள்ள வேண்டும்.
கலைஞர் உரை:

குற்றம் புரிவது அழிவை உண்டாக்கக் கூடிய பகையாக மாறுவதால் குற்றம் புரியாமல் இருப்பது என்பதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும்.


Kural 434


Kutramae Kaakka Porulaagak Kutramae
Atran Tharuoom Pagai

Kural Explanation: Guard against faults as a matter (of great consequence; for) faults are a deadly enemy

Leave a Comment