குறள் 421

குறள் 421:

 

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்
மு.வ உரை:
அறிவு அழிவு வராமல் காக்கும் கருவியாகும், அன்றியும் பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும் அழிக்க முடியாத உள்ளரணும் ஆகும்.
சாலமன் பாப்பையா உரை:
அறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம், பகைவராலும் அழிக்க முடியாத உட்கோட்டை.
கலைஞர் உரை:

பகையால் அழிவு வாராமல் பாதுகாக்கும் அரண், அறிவு ஒன்றுதான்.


Kural 421


Arivatrang Kaakkung Karuvi Seruvaarkkum
Ullazhikka Laagaa Aran

Kural Explanation: Wisdom is a weapon to ward off destruction; it is an inner fortress which enemies cannot destroy

Leave a Comment