குறள் 408

குறள் 408:

 

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு
மு.வ உரை:
கல்லாதவனிடம் சேர்ந்துள்ள செல்வமானது, கற்றறிந்த நல்லவரிடம் உள்ள வறுமையைவிட மிகத்துன்பம் செய்வதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
படிக்காதவரிடம் இருக்கும் செல்வம், நல்லவரிடம் இருக்கும் வறுமையைக் காட்டிலும் கொடியது.
கலைஞர் உரை:

முட்டாள்களிடம் குவிந்துள்ள செல்வம், நல்லவர்களை வாட்டும் வறுமையைவிட அதிக துன்பத்தைத் தரும்.


Kural 408


Nallaarkan Patta Varumaiyin Innaadhae
Kallaarkan Patta Thiru

Kural Explanation: Wealth, gained by the unlearned, will give more sorrow than the poverty which may come upon the learned

Leave a Comment