குறள் 374

குறள் 374:

இருவே றுலகத் தியற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு

மு.வ உரை:

உலகத்தின் இயற்க்கை ஊழின் காரணமாக இரு வேறு வகைப்படும், செல்வம் உடையவராதலும் வேறு அறிவு உடையவராதலும் வேறு.

சாலமன் பாப்பையா உரை:

உலகின் இயல்பு இருவகைப்பட்டது; செல்வரை ஆக்கும் விதியும், அறிஞரை ஆக்கும் விதியும் வேறு வேறாம்.

கலைஞர் உரை:

உலகின் இயற்கை நிலை இரு வேறுபட்டதாகும் ஒருவர் செல்வமுடையவராகவும், ஒருவர் அறிவுடையவராகவும் இருப்பதே அந்த வேறுபாடாகும்.


 

Kural 374


Iruveru Ulagaththu Iyarkai Thiruveru
Thelliya Raadhalum Veru

Kural Explanation: There are (through fate) two different natures in the world, hence the difference (observable in men) in (their acquisition of) wealth, and in their attainment of knowledge

Leave a Comment