குறள் 280

குறள் 280:

 

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்த தொழித்து விடின்
மு.வ உரை:
உலகம் பழிக்கும் தீயொழுக்கத்தை விட்டு விட்டால் மொட்டை அடித்தலும் சடை வளர்த்தலுமாகிய புறக்கோலங்கள் வேண்டா.
சாலமன் பாப்பையா உரை:
உயர்ந்தோர் வெறுத்தவற்றை மனத்தால் ஒதுக்கிவிட்ட பின் தலைமுடியைச் சிரைத்தல், நீள வளர்த்தல் என்பன பற்றி எண்ண வேண்டா.
கலைஞர் உரை:

உலகத்தாரின் பழிப்புக்கு உள்ளாகும் செயல்களைத் துறக்காமல் ஒரு துறவி, தனது தலையை மொட்டையடித்துக் கொண்டோ, சடாமுடி வளர்த்துக் கொண்டோ கோலத்தை மட்டும் மாற்றிக் கொள்வது ஒரு ஏமாற்று வித்தையே ஆகும்.


Kural 280


Mazhiththalum Neettalum Vendaa Ulagam
Pazhiththadhu Ozhiththu Vidin

Kural Explanation: There is no need of a shaven crown, nor of tangled hair, if a man abstain from those deeds which the wise have condemned

Leave a Comment