குறள் 19

குறள் 19:

 

தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்
மு.வ உரை:
மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
மழை பொய்த்துப் போனால், விரிந்த இவ்வுலகத்தில் பிறர்க்குத் தரும் தானம் இராது; தன்னை உயர்த்தும் தவமும் இராது.
கலைஞர் உரை:

இப்பேருலகில் மழை பொய்த்து விடுமானால் அது, பிறர் பொருட்டுச் செய்யும் தானத்திற்கும், தன்பொருட்டு மேற்கொள்ளும் நோன்புக்கும் தடங்கலாகும்.


Kural 19


Thaanam Thavamirandum Thangaa Viyanulagam
Vaanam Vazhangaa Dhenin

Kural Explanation: If rain fall not, penance and alms-deeds will not dwell within this spacious world

Leave a Comment