குறள் 152

குறள் 152:

 

பொறுத்த லிறப்பினை யென்றும் அதனை
மறத்த லதனினும் நன்று
மு.வ உரை:
வரம்பு கடந்து பிறர் செய்யும் தீங்கை எப்போதும் பொறுக்க வேண்டும்; அத் தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்து விடுதல் பொறுத்தலை விட நல்லது.
சாலமன் பாப்பையா உரை:
தீமையைத் தண்டிக்க முடியும் என்றபோதும் பொறுத்துக் கொள்க; அந்தத் தீமையை மனத்துள் வைக்காமல் மறந்தே விடுவது பொறுத்தலையும் விட நல்லது.
கலைஞர் உரை:

அளவுகடந்து செய்யப்பட்ட தீங்கைப் பொறுத்துக் கொள்வதைக் காட்டிலும், அந்தத் தீங்கை அறவே மறந்து விடுவதே சிறந்த பண்பாகும்.


Kural 152


Poruththal Irappinai Endrum Adhanai
Maraththa Ladhaninum Nandru

Kural Explanation: Bear with reproach even when you can retaliate; but to forget it will be still better than that

Leave a Comment