குறள் 1305

குறள் 1305:

 

நலத்தகை நல்லவர்க் கேஎர் புலத்தகை 
பூவன்ன கண்ணார் அகத்து
மு.வ உரை:
நல்ல பண்புகள் அமைந்த நல்ல ஆடவர்க்கு அழகு, மலர் போன்ற கண்களை உடைய மகளிரின் நெஞ்சம் விளையும் ஊடலின் சிறப்பே ஆகும்.
சாலமன் பாப்பையா உரை:
நல்ல குணங்களால் உயர்ந்தவருக்கு அழகு தருவது, பூப்போன்ற கண்ணை உடைய மனைவியின் மனத்தே நடக்கும் ஊடலின் மிகுதியே.
கலைஞர் உரை:

மலர் விழி மகளிர் நெஞ்சில் விளையும் ஊடலே பண்பார்ந்த நல்ல காதலர்க்கு அழகு சேர்க்கும்.


Kural 1305


Nalaththagai Nallavarkku Eer Pulaththagai
Poovanna Kannaar Agaththu

Kural Explanation: An increased shyness in those whose eyes are like flowers is beautiful even to good and virtuous husbands

Leave a Comment