குறள் 1257

குறள் 1257:

 

நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
பேணியார் பெட்ப செயின்
மு.வ உரை:
நாம் விரும்பிய காதலர் காமத்தால் நமக்கு விருப்பமானவற்றைச் செய்வாரானால். நாணம் என்று சொல்லப்படும் ஒரு பண்பையும் அறியாமல் இருப்போம்.
சாலமன் பாப்பையா உரை:
என்னால் விரும்பப்பட்டவர் காதல் ஆசையில் நான் விரும்பியதையே செய்தபோது, நாணம் என்று சொல்லப்படும் ஒன்றை அறியாமலேயே இருந்தேன்.
கலைஞர் உரை:

நமது அன்புக்குரியவர் நம்மீது கொண்ட காதலால் நமக்கு விருப்பமானவற்றைச் செய்யும்போது, நாணம் எனும் ஒரு பண்பு இருப்பதையே நாம் அறிவதில்லை.


Kural 1257


Naanena Ondro Ariyalam Kaamaththaal
Peniyaar Petpa Seyin

Kural Explanation: I know nothing like shame when my beloved does from love (just) what is desired (by me)

Leave a Comment