குறள் 1219

குறள் 1219:

 

நனவினான் நல்காரை நோவர் கனவினான்
காதலர்க் காணா தவர்
மு.வ உரை:
கனவில் காதலர் வரக் காணாத மகளிர், நனவில் வந்து அன்பு செய்யாத கா‌தலரை ( அவர் வராத காரணம் பற்றி ) நொந்து கொள்வர்.
சாலமன் பாப்பையா உரை:
இன்னும் திருமணம் ஆகாத, ஆகிக் கணவனைப் பிரிந்து அறியாத இந்தப் பெண்கள், கனவில் காதலனைக் கண்டு அறியாதவர், ஆதலால், அவர்கள் அறிய நேரில் வந்து என்னிடம் அன்பு காட்டாத என்னவரை அன்பற்றவர் என்று ஏசுகின்றனர்.
கலைஞர் உரை:

கனவில் காதலரைக் காணாதவர்கள்தான் அவர் நேரில் வந்து காணவில்லையே என்று நொந்து கொள்வர்.


Kural 1219


Nanavinaan Nalgaarai Novar Kanavinaan
Kaadhalark Kaanaa Thavar

Kural Explanation: They who have no dear ones to behold in their dreams blame him who visits me not in my waking hours

Leave a Comment