குறள் 1116

குறள் 1116:

 

மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்
மு.வ உரை:
விண்மீன்கள் திங்களையும் இவளுடைய முகத்தையும் வேறுபாடு கண்டு அறியமுடியாமல் தம் நிலையில் நிற்காமல் கலங்கித் திரிகின்றன.
சாலமன் பாப்பையா உரை:
அதோ, நிலாவிற்கும் என் மனைவியின் முகத்திற்கும் வேறுபாடு தெரியாது நட்சத்திரங்கள், தாம் இருந்த இடத்திலிருந்து இடம் விட்டுக் கலங்கித் திரிகின்றன!
கலைஞர் உரை:

மங்கையின் முகத்துக்கும், நிலவுக்கும் வேறுபாடு தெரியாமல் விண்மீன்கள் மயங்கிக் தவிக்கின்றன.


Kural 1116


Madhiyum Madandhai Muganum Ariyaa
Padhiyin Kalangiya Meen

Kural Explanation: The stars have become confused in their places not being able to distinguish between the moon and the maid's countenance

Leave a Comment