குறள் 1098

குறள் 1098:

 

அசையியற் குண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப் 
பசையினள் பைய நகும்
மு.வ உரை:
யான் நோக்கும் போது அதற்காக அன்பு கொண்டவனாய் மெல்லச் சிரிப்பாள், அசையும் மெல்லிய இயல்பை உடைய அவளுக்கு அப்போது ஓர் அழகு உள்ளது.
சாலமன் பாப்பையா உரை:
யாரோ எவரோ போல அவள் பேசிய பின்பும் நான் அவளைப் பார்க்க, அவள் மனம் நெகிழ்ந்து மனத்திற்குள் மெல்ல சிரித்தாள்; அச்சிரிப்பிலும் அவளுக்கு ஏதோ ஒரு குறிப்பு இருப்பது தெரிகிறது.
கலைஞர் உரை:

நான் பார்க்கும் போது என் மீது பரிவு கொண்டவளாக மெல்லச் சிரிப்பாள்; அப்போது, துவளுகின்ற அந்தத் துடியிடையாள் ஒரு புதிய பொலிவுடன் தோன்றுகிறாள்.


Kural 1098


Asaiyiyarku Undaandor Yeeryaan Nokka
Pasaiyinal Paiya Nagum

Kural Explanation: When I look, the pitying maid looks in return and smiles gently; and that is a comforting sign for me

Leave a Comment