குறள் 1018

குறள் 1018:

 

பிறர்நாணத் தக்கது தானாணா னாயின்
அறநாணத் தக்க துடைத்து
மு.வ உரை:
ஒருவன் மற்றவர் நாணத்தக்க பழிக்குக் காரணமாக இருந்தும் தான் நாணாமலிருப்பானானால், அறம் நாணி அவனைக் கைவிடும்
தன்மையுடையதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
மற்றவர் வெட்கப்படும் ஒன்றிற்கு ஒருவன் வெட்கப்படாமல் அதைச் செய்வான் என்றால், அறம் வெட்கப்படும் குற்றம் அவனிடம் இருக்கிறது.
கலைஞர் உரை:

வெட்கப்படவேண்டிய அளவுக்குப் பழிக்கு ஆளானவர்கள் அதற்காக வெட்கப்படாமல் இருந்தால் அவர்களை விட்டு அறநெறி வெட்கப்பட்டு அகன்று விட்டதாகக் கருத வேண்டும்.


Kural 1018


Pirarnaanath Thakkadhu Thaannaanaa Naayin
Aramnaana Thakkadhu Udaiththu

Kural Explanation: Virtue is likely to forsake him who shamelessly does what others are ashamed of

Leave a Comment