குறள் 809

குறள் 809:

 

கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு
மு.வ உரை:
உரிமை கெடாமல் தொன்று தொட்டு வந்த உறவு உடையவரின் தொடர்பைக் கைவிடாதவரை உலகம் விரும்பிப் போற்றும்.
சாலமன் பாப்பையா உரை:
உரிமையை விடாது நெடுங்காலமாக வரும் நட்பினை உடையவர் கேடு செய்தாலும் அந்த நட்பை விட்டு விடாதவரை, அவரது நட்புள்ளம் குறித்து உலகம் விரும்பும்.
கலைஞர் உரை:

தொன்றுதொட்டு உரிமையுடன் பழகிய நட்புறவைக் கைவிடாமல் இருப்பவரை உலகம் போற்றும்.


Kural 809


Kedaaa Vazhivandha Kenmaiyaar Kenmai
Vidaaar Vizhaiyum Ulagu

Kural Explanation: They will be loved by the world, who have not forsaken the friendship of those with whom they have kept up an unbroken long-standing intimacy

Leave a Comment