குறள் 803

குறள் 803:

 

பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை
செய்தாங் கமையாக் கடை
மு.வ உரை:
பழகியவர் உரிமைப்பற்றிச் செய்யும் செயலைத் தாம் செய்தது போலவேக் கருதி உடன்படாவிட்டால் அவரோடு தாம் பழகிய நட்பு என்ன பயன் தரும்.
சாலமன் பாப்பையா உரை:
தனக்கு உடன்பாடு இல்லை என்றாலும், நண்பர் உரிமையாகச் செய்துவிட்டதைத் தானும் விரும்பிச் செய்தது போலவே காட்டவில்லை என்றால், நெடுங்காலமாகக் கொண்ட நட்பு என்ன பயனைத் தரும்?
கலைஞர் உரை:

பழைய நண்பர்கள் உரிமையோடு செய்த காரியங்களைத்தாமே செய்ததுபோல உடன்பட்டு இருக்காவிட்டால், அதுவரை பழகிய நட்பு பயனற்றுப்போகும்.


Kural 803


Pazhagiya Natpevan Seiyung Kezhudhagaimai
Seidhaangu Amaiyaa Kadai

Kural Explanation: Of what avail is long-standing friendship, if friends do not admit as their own actions done through the right of intimacy ?

Leave a Comment