குறள் 742

குறள் 742:

 

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்
மு.வ உரை:
மணிபோல் தெளிந்த நீரும், வெட்ட வெளியான நிலமும், மலையும், அழகிய நிழல் உடைய காடும் ஆகிய இவை நான்கும் உள்ளதே அரண் ஆகும்.
சாலமன் பாப்பையா உரை:
தெளிந்த நீர், வெட்ட வெளியான நிலம், உயர்ந்த மலை, அடர்ந்த காடு என்னும் இவையே நீர் அரண், நில அரண், மலை அரண், காட்டு அரண் என இயற்கை அரண்களாகும்.
கலைஞர் உரை:

ஆழமும் அகலமும் கொண்ட அகழ், பரந்த நிலம், உயர்ந்து நிற்கும் மலைத்தொடர், அடர்ந்திருக்கும் காடு ஆகியவற்றை உடையதே அரணாகும்.


Kural 742


Manineerum Mannum Malaiyum Aninizhar
Kaadum Udaiya Tharan

Kural Explanation: A fort is that which has everlasting water, plains, mountains and cool shady forests

Leave a Comment