குறள் 692

குறள் 692:

 

மன்னர் விழைப விழையாமை மன்னரான்
மன்னிய ஆக்கந் தரும்
மு.வ உரை:
அரசர் விரும்புகின்றவர்களைத் தாம் விரும்பாமலிருத்தல் (அரசரைச் சார்ந்திருப்பவர்க்கு) அரசரால் நிலையான ஆக்கத்தைப் பெற்றுத் தரும்.
சாலமன் பாப்பையா உரை:
ஆட்சியாளருடன் பழகுபவர் ஆட்சியாளர் எவற்றை விரும்புகிறாரோ அவற்றை விரும்பாமல் இருப்பது, அவருக்கு ஆட்சியாளரால் நிலைத்த செல்வத்தைக் கொடுக்கும்.
கலைஞர் உரை:

மன்னர் விரும்புகின்றவைகளைத் தமக்கு வேண்டுமெனத் தாமும் விரும்பாமலிருத்தால் அவர்க்கு அந்த மன்னர் வாயிலாக நிலையான ஆக்கத்தை அளிக்கும்.


Kural 692


Mannar Vizhaipa Vizhaiyaamai Mannaraan
Manniya Aakkan Tharum

Kural Explanation: For ministers not to cover the things desired by their kings will through the kings themselves yield them everlasting wealth

Leave a Comment