குறள் 638

குறள் 638:

 

அறிகொன் றறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்
மு.வ உரை:
அறிவுறுத்துவாரின் அறிவையையும் அழித்துத் தானும் அறியாதவனாக அரசன் இருந்தாலும், அமைச்சன் அவனுக்கு உறுதியானவற்றை எடுத்துக்கூறல் க‌டமையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
அறிந்து சொல்பவர் அறிவையும் மதியாமல், செய்யவேண்டிய வழிகளைத் தாமும் தெரியாமல், ஆட்சியாளர் இருந்தால், அக்குற்றம் கண்டு கோபம் கொள்ளாமல், அஞ்சாமல், அவருக்கு நன்மை தருவதைக் கூற வேண்டியது அமைச்சர் கடமையாகும்.
கலைஞர் உரை:

சொன்னதையும் கேட்காமல், சொந்த அறிவும் இல்லாமல் இருப்போர்க்கு, அருகிலுள்ள அமைச்சர்கள்தான் துணிவோடு நல்ல யோசனைகளைக் கூற வேண்டும்.


Kural 638


Arikondru Ariyaan Eninum Urudhi
Uzhaiyirundhaan Kooral Kadan

Kural Explanation: Though his leader lacks knowledge and repels advice, The loyal minister's obligation is to cry out his counsel.

Leave a Comment