குறள் 637

குறள் 637:

 

செயற்கை அறிந்தக் கடைத்து முலகத்
தியற்கை அறிந்து செயல்
மு.வ உரை:
நூலறிவால் செயலைச் செய்யும் வகைகளைச் அறிந்த போதிலும் உலகத்தின் இயற்கையை அறிந்து அதனோடு பொருந்துமாறு செய்யவேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
பல்வேறு மொழி நாட்டு நூல்களின் வழி, புதிய செயல் திறங்களை அறிந்திருந்தாலும், தன் நாட்டின் இயற்கை மக்கள் இயல்பு ஆகியவற்றை அறிந்து அவற்றிற்கு ஏற்பச் செய்க.
கலைஞர் உரை:

செயலாற்றல் பற்றிய நூலறிவைப் பெற்றிருந்தாலும், உலக நடைமுறைகளை உணர்ந்து பார்த்தே அதற்கேற்றவாறு அச்செயல்களை நிறைவேற்ற வேண்டும்.


Kural 637


Seyarkai Arindha Kadaiththum Ulagaththu
Iyarkai Arindhu Seyal

Kural Explanation: Though you have learned theoretical methods, Act only after you know the world's practices.

Leave a Comment