குறள் 604

குறள் 604:

 

குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு
மு.வ உரை:
சோம்பலில் அகப்பட்டு சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர்க்கு குடியின் பெருமை அழிந்து குற்றம் பெருகும்.
சாலமன் பாப்பையா உரை:
சோம்பலில் வீழ்வதால் சிறந்தவற்றையேச் செய்யும் முயற்சியே இல்லாதவரின் குடும்பமும் அழியும் குற்றமும் பெருகும்.
கலைஞர் உரை:

சோம்பேறித்தனமானவர்களின் வாழ்க்கையில் குற்றங்களும் பெருகிவிடும்; குடும்பப் பெருமையும் சீரழிந்து போய்விடும்.


Kural 604


Kudimadindhu Kutram Perukum Madimadindhu
Maanda Ugnatri Lavarkku

Kural Explanation: Family (greatness) will be destroyed, and faults will increase, in those men who give way to laziness, and put forth no dignified exertions

Leave a Comment