குறள் 546

குறள் 546:

 

வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்
மு.வ உரை:
ஒருவனுக்கு வெற்றி பெற்றுத் தருவது வேல் அன்று, அரசனுடைய செங்கோலே ஆகும், அச் செங்கோலும் கோணாதிருக்குமாயின்.
சாலமன் பாப்பையா உரை:
ஆட்சியாளருக்கு வெற்றி தருவது ஆயுதம் அன்று; அவரின் நேரிய ஆட்சியே; அதுவும் தவறான ஆட்சியாக இல்லாதிருக்க வேண்டும்.
கலைஞர் உரை:

ஓர் அரசுக்கு வெற்றியைத் தருவது பகைவரை வீழ்த்தும் வேலல்ல; குடிமக்களை வாழவைக்கும் வளையாத செங்கோல்தான்.


Kural 546


Velandru Vendri Tharuvadhu Mannavan
Koladhooung Kodaa Thenin

Kural Explanation: It is not the javelin that gives victory, but the king's sceptre, if it do no injustice

Leave a Comment