குறள் 466

குறள் 466:

 

செய்தக்க அல்ல செயக்கெடுஞ் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்
மு.வ உரை:
ஒருவன் செய்யத்தகாத செயல்களைச் செய்வதனால் கெடுவான், செய்யத்தக்க செயல்களை செய்யாமல் விடுவதனாலும் கெடுவான்.
சாலமன் பாப்பையா உரை:
செய்யக்கூடாதவற்றைச் செய்தாலும் செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல் விட்டாலும் அழிவு வரும்.
கலைஞர் உரை:

செய்யக் கூடாததைச் செய்வதால் கேடு ஏற்படும்; செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டாலும் கேடு ஏற்படும்.


Kural 466


Seidhakka Alla Seyak Kedum Seidhakka
Seyyaamai Yaanung Kedum

Kural Explanation: He will perish who does not what is not fit to do; and he also will perish who does not do what it is fit to

Leave a Comment