குறள் 454

குறள் 454:

 

மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்
கினத்துள தாகும் அறிவு
மு.வ உரை:
ஒருவனுக்கு சிறப்பறிவு மனத்தில் உள்ளது போலக் காட்டி (உண்மையாக நோக்கும் போது) அவன் சேர்ந்த இனத்தில் உள்ளதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
அறிவு ஒருவன் மனத்துள் இருப்பது போலத் தோன்றும்; உண்மையில் அது அவன் சேர்ந்துள்ள இனத்தின்பால் இருந்து பெறப்படுவதே ஆகும்.
கலைஞர் உரை:

ஒருவரின் அறிவு அவரது மனத்தின் இயல்பு என்பது போல் தோன்றினாலும், அது அவர் சேர்ந்த கூட்டத்தாரின் தொடர்பால் வெளிப்படுவதேயாகும்.


Kural 454


Manaththu Ladhupola Kaatti Oruvarku
Inaththula Thaagum Arivu

Kural Explanation: Wisdom appears to rest in the mind, but it really exists to a man in his companions

Leave a Comment