குறள் 437

குறள் 437:

 

செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்
மு.வ உரை:
செய்யத்தக்க நன்மைகளைச் செய்யாமல் பொருளைச் சேர்த்து வைத்திருப்பவனுடைய செல்வம், உய்யுந் தன்மை இல்லாமல் அழியும்.
சாலமன் பாப்பையா உரை:
செல்வத்தால் தனக்குச் செய்து கொள்ள வேண்டியவற்றைப் பொருள்மீது கொண்ட பற்றினால் செய்யாமல், கஞ்சனாய் வாழும் ஆட்சியாளனின் செல்வம் வீணே கெட்டு, அழிந்து போகும்.
கலைஞர் உரை:

நற்பணிகளைச் செய்யாமல் சேமித்து வைக்கப்படும் கருமியின் செல்வம் பயன் ஏதுமின்றிப் பாழாகிவிடும்.


Kural 437


Seyarpaala Seiyaa Thivariyaan Selvam
Uyarpaala Thandrik Kedum

Kural Explanation: The wealth of the avaricious man, who does not expend it for the purposes for which he ought to expend it will waste away and not continue

Leave a Comment