குறள் 419

குறள் 419:

 

நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராத லரிது
மு.வ உரை:
நுட்பமான பொருள்களைக் கேட்டறிந்தவர் அல்லாத மற்றவர், வணக்கமானச் சொற்களைப் பேசும் வாயினை உடையவராக முடியாது.
சாலமன் பாப்பையா உரை:
நுண்ணிய கேள்வி ஞானம் இல்லாதவர், பணிவுமிக்க சொற்களைப் பேசுபவராக ஆவது கடினம்.
கலைஞர் உரை:

தெளிவான கேள்வியறிவு இல்லாதவர்கள், அடக்கமாகப் பேசும் அமைதியான பண்புடையவர்களாக இருக்க இயலாது.


Kural 419


Nunangiya Kelviya Rallaar Vanangiya
Vaayina Raadhal Aridhu

Kural Explanation: It is a rare thing to find modesty, a reverend mouth- with those who have not received choice instruction

Leave a Comment