குறள் 341

குறள் 341:

 

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் அலன்
மு.வ உரை:
ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை.
சாலமன் பாப்பையா உரை:
எந்த எந்தப் பொருள்களின் மேல் விருப்பம் இல்லாதவனாய் விலகுகிறானோ அவன் அந்த அந்த பொருள்களால் துன்பப்படமாட்டான்.
கலைஞர் உரை:

ஒருவன் பல வகையான பற்றுகளில் எந்த ஒன்றை விட்டு விட்டாலும், குறிப்பிட்ட அந்தப் பற்று காரணமாக வரும் துன்பம், அவனை அணுகுவதில்லை.


Kural 341


Yaadhanin Yaadhanin Neengiyaan Nodhal
Adhanin Adhanin Alan

Kural Explanation: Whatever thing, a man has renounced, by that thing; he cannot suffer pain

Leave a Comment