குறள் 324

குறள் 324:

 

நல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றுங் 
கொல்லாமை சூழும் நெறி
மு.வ உரை:
நல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது எது என்றால், எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் போற்றும் நெறியாகும்.
சாலமன் பாப்பையா உரை:
நல்ல வழி எது என்றால், எந்த உயிரையும் கொலை செய்யாமல் அறம் காக்கும் வழிதான்.
கலைஞர் உரை:

எந்த உயிரையும் கொல்லக் கூடாது எனும் நெறி காப்பதுதான் நல்லற வழி எனப்படும்.


Kural 324


Nallaaru Enappaduvadhu Yaadhenin Yaadhondrum
Kollaamai Soozhum Neri

Kural Explanation: Good path is that which considers how it may avoid killing any creature

Leave a Comment