குறள் 196

குறள் 196:

 

பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி யெனல்
மு.வ உரை:
பயனில்லாத சொற்களைப் பலமுறையும் சொல்லுகின்ற ஒருவனை மனிதன் என்று சொல்லக்கூடாது, மக்களுள் பதர் என்று சொல்லவேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
பயனற்ற சொற்களையே பலகாலமும் சொல்பவனை மனிதன் என வேண்டா; மனிதருள் பதர் என்றே சொல்லுங்கள்.
கலைஞர் உரை:

பயனற்றவைகளைச் சொல்லிப் பயன்பெற நினைப்பவனை, மனிதன் என்பதைவிட அவன் ஒரு பதர் என்பதே பொருத்தமானதாகும்.


Kural 196


Payanil Sol Paaraattu Vaanai Maganenal
Makkat Padhadi Yenal

Kural Explanation: Call not him a man who parades forth his empty words Call him the chaff of men

Leave a Comment