குறள் 193

குறள் 193:

 

நயனில னென்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை
மு.வ உரை:
ஒருவன் பயனில்லா பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
பயனற்ற சொற்களை விரித்துப் பேசும் ஒருவன் பேச்சு அவன் நீதியற்றவன் என்பதைக் காட்டிவிடும்.
கலைஞர் உரை:

பயனற்றவைகளைப்பற்றி ஒருவன் விரிவாகப் பேசிக் கொண்டிருப்பதே அவனைப் பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும்.


Kural 193


Nayanilan Enbadhu Sollum Payanila
Paari Thuraikkum Urai

Kural Explanation: That conversation in which a man utters forth useless things will say of him "he is without virtue."

Leave a Comment