குறள் 994

குறள் 994:

 

நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புள ராட்டும் உலகு
மு.வ உரை:
நீதியையும் நன்மையையும் விரும்பிப் பிறர்க்குப் பயன்பட வாழும் பெரியோரின் நல்லப் பண்பை உலகத்தார் போற்றிக் கொண்டாடுவர்.
சாலமன் பாப்பையா உரை:
நீதியையும் அறத்தையும் விரும்பிப் பிறர்க்கும் பயன்படுபவரின் பண்பினை உலகத்தவர் சிறப்பித்துப் பேசுவர்.
கலைஞர் உரை:

நீதி வழுவாமல் நன்மைகளைச் செய்து பிறருக்குப் பயன்படப் பணியாற்றுகிறவர்களின் நல்ல பண்பை உலகம் பாராட்டும்.


Kural 994


Nayanodu Nandri Purindha Payanudaiyaar
Panbula Raattum Ulagu

Kural Explanation: The world applauds the character of those whose usefulness results from their equity and charity

Leave a Comment