குறள் 965

குறள் 965:

 

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்
மு.வ உரை:
மலை போல் உயர்ந்த நிலையில் உள்ளவரும், தாழ்வுக்கு காரணமானச் செயல்களை ஒரு குன்றிமனி அளவு செய்தாலும் தாழ்ந்து போய் விடுவர்.
சாலமன் பாப்பையா உரை:
நல்ல குடும்பத்தில் பிறந்து மலைபோல உயர்ந்தவரும்கூட தாழ்வானவற்றை ஒரு குன்றிமணி அளவு செய்தாலும் தாழ்ந்து போவார்.
கலைஞர் உரை:

குன்றினைப் போல் உயர்ந்து கம்பீரமாக நிற்பவர்களும் ஒரு குன்றிமணி அளவு இழிவான செயலில் ஈடுபட்டால் தாழ்ந்து குன்றிப் போய் விடுவார்கள்.

Kural 965


Kundrin Anaiyaarum Kundruvar Kundruva
Kundri Anaiya Seyin

Kural Explanation: Even those who are exalted like a hill will be thought low, if they commit deeds that are debasing

Leave a Comment