குறள் 892

குறள் 892:

 

பெரியாரைப் பேணா தொழுகிற் பெரியாராற்
பேரா இடும்பை தரும்
மு.வ உரை:
ஆற்றல் மிகுந்த பெரியாரை விரும்பி மதிக்காமல் நடந்தால், அது அப் பெரியாரால் நீங்காத துன்பத்தைத் தருவதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
பெரியவர்களை மதிக்காமல் நடந்தால், அப்பெரியவர்களால் தீராத துன்பம் வரும்.
கலைஞர் உரை:

பெரியோர்களை மதிக்காமல் நடந்து கொண்டால் நீங்காத பெருந்துன்பத்தை அடைய நேரிடும்.


Kural 892


Periyaarai Penaadhu Ozhukir Periyaaraal
Peraa Idumbai Tharum

Kural Explanation: To behave without respect for the great (rulers) will make them do (us) irremediable evils

Leave a Comment