குறள் 847

குறள் 847:

 

அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு
மு.வ உரை:
அரிய மறைபொருளை மனத்தில் வைத்துக் காக்காமல் சேர்த்தும் வெளிபடுத்தும் அறிவில்லாதவன் தனக்குத் தானே பெருந்தீங்கு செய்து கொள்வான்.
சாலமன் பாப்பையா உரை:
அறிவற்றவன் அரிய புத்திமதியையும் ஏற்றுக் கொள்ளான்; அதனால் அவன் தனக்குத் தானே பெரும் துன்பத்தைச் செய்து கொள்வான்.
கலைஞர் உரை:

நல்வழிக்கான அறிவுரைகளைப் போற்றி அவ்வழி நடக்காத அறிவிலிகள், தமக்குத் தாமே பெருந்துன்பத்தைத் தேடிக் கொள்வார்கள்.


Kural 847


Arumarai Sorum Arivilaan Seiyum
Perumirai Thaanae Thanakku

Kural Explanation: The fool who neglects precious counsel does, of his own accord, a great injury to himself

Leave a Comment