குறள் 764

குறள் 764:

 

அழிவின் றறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை
மு.வ உரை:
(போர் முனையில்) அழிவு இல்லாததாய்(பகைவருடைய) வஞ்சனைக்கு இரையாகாததாய், தொன்று தொட்டுவந்த அஞ்சாமை உடையதே படையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
போரில் தோற்காமலும், பகைவரின் சதிக்குத் துணை போகாமலும், தொன்று தொட்டு வரும் வீரத்தை உடையதே படை.
கலைஞர் உரை:

எந்த நிலையிலும் அழியாததும், சூழ்ச்சிக்கு இரையாகததும், பரம்பரையாகவே பயமற்ற உறுதி உடையதும்தான் உண்மையான படை எனப்படும்.


Kural 764


Azhivindri Araipogaa Thaagi Vazhivandha
Vanka Nadhuve Padai

Kural Explanation: That indeed is an army which has stood firm of old without suffering destruction or deserting (to the enemy)

Leave a Comment