குறள் 690

குறள் 690:

 

இறுதி பயப்பினும் எஞ்சா திறைவற் 
குறுதி பயப்பதாம் தூது
மு.வ உரை:
தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும் அதற்காக அஞ்சி விட்டுவிடாமல், தன் அரசனுக்கு நன்மை உண்டாகுமாறு செய்கின்றவனே தூதன்.
சாலமன் பாப்பையா உரை:
தம் அரசு சொல்லி அனுப்பிய செய்தியை அடுத்த அரசிடம் சொல்லும்போது தம் உயிருக்கே ஆபத்து நேர்ந்தாலும் அஞ்சாமல் தம் அரசிற்கு நன்மை தேடித்தருபவரே நல்ல தூதர்.
கலைஞர் உரை:

தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும், அதை எண்ணிப் பயந்து விடாமல் உறுதியுடன் கடமையாற்றுகிறவனே தன்னுடைய தலைவனுக்கு நம்பிக்கையான தூதனாவான்.


Kural 690


Irudhi Payappinum Enjaadhu Iraivarku
Urudhi Payappadhaam Thoodhu

Kural Explanation: He is the ambassador who fearlessly seeks his sovereign's good though it should cost him his life (to deliver his message)

Leave a Comment