குறள் 652

குறள் 652:

 

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை
மு.வ உரை:
புகழையும் அறத்தையும் தாராத (தூய்மை அற்ற) செயல்களை எக்காலத்திலும் ஒருவன் செய்யாமல் விட்டொழிக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
இம்மைக்குப் புகழையும் மறுமைக்கு நன்மையையும் தராத செயல்களை எந்தக் காலத்திலும் விட்டுவிட வேண்டும்.
கலைஞர் உரை:

புகழையும், நன்மையையும் தராத தூய்மையற்ற செயல்களை எந்த நிலையிலும் செய்யாமல் அவற்றை விட்டொழிக்க வேண்டும்.


Kural 652


Endrum Oruvudhal Vendum Pugazhodu
Nandri Payavaa Vinai

Kural Explanation: Ministers should at all times avoid acts which, in addition to fame, yield no benefit (for the future)

Leave a Comment