குறள் 527

குறள் 527:

 

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் 
அன்னநீ ரார்க்கே உள
மு.வ உரை:
காக்கை (தனக்கு கிடைத்ததை) மறைத்து வைக்காமல் சுற்றத்தைக் கூவி அழைத்து உண்ணும். ஆக்கமும் அத்தகைய இயல்பு உடையவர்க்கே உண்டு.
சாலமன் பாப்பையா உரை:
காக்கை தன் உணவை மறைக்காமல், தன் இனத்தைச் சத்தமிட்டு அழைத்து உண்ணும்; இதுபோன்ற குணம் உடையவர்க்கே செல்வமும் உள ஆகும்.
கலைஞர் உரை:

தனக்குக் கிடைத்ததை மறைக்காமல் தனது சுற்றத்தைக் கூவி அழைத்துக் காக்கை உண்ணும் அந்தக் குணம் உடையவர்களுக்கு மட்டுமே உலகில் உயர்வு உண்டு.


Kural 527


Kaakkai Karavaa Karaindhunnum Aakkamum
Annanee Raarkkae Ula

Kural Explanation: The crows do not conceal (their prey), but will call out for others (to share with them) while they eat it; wealth will be with those who show a similar disposition (towards their relatives)

Leave a Comment