குறள் 526

குறள் 526:

 

பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத் தில்
மு.வ உரை:
பெரிய கொடையாளியாகவும் சினமற்றவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப் போல் சுற்றத்தாரை உடையவர் உலகத்தில் யாரும் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் பெருங்கொடையை உடையவனாய், சினத்தை விரும்பாதவனாய் இருப்பான் என்றால் அவனைப் போலச் சுற்றம் உடையவர் உலகில் இல்லை.
கலைஞர் உரை:

பெரிய கொடையுள்ளம் கொண்டவனாகவும், வெகுண்டு எழும் சீற்றத்தை விலக்கியவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப் போல் சுற்றம் சூழ இருப்போர் உலகில் யாரும் இல்லை எனலாம்.


Kural 526


Perungodaiyaan Penaan Veguli Avanin
Marungudaiyaar Maanilaththu Il

Kural Explanation: No one, in all the world, will have so many relatives (about him), as he who makes large gift, and does not give way to anger

Leave a Comment