குறள் 495

குறள் 495:

 

நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற
மு.வ உரை:
ஆழமுள்ள நீரில் முதலை மற்ற உயிர்களை வெல்லும், ஆனால் நீரிலிருந்து விலகிவந்தால் அந்த முதலையையும் மற்ற உயிர்கள் வென்றுவிடும்.
சாலமன் பாப்பையா உரை:
முதலை நீரில் வெற்றி பெறும்; நீரைவிட்டு வெளியே வந்தால் அதனை மற்றவை வெல்லும்.
கலைஞர் உரை:

தண்ணீரில் இருக்கும் வரையில்தான் முதலைக்குப் பலம்; தண்ணீரைவிட்டு வெளியே வந்து விட்டால் ஒரு சாதாரண உயிர்கூட அதனை விரட்டி விடும்.


Kural 495


Nedumpunalul Vellum Mudhalai Adumpunalin
Neengin Adhanai Pira

Kural Explanation: In deep water, a crocodile will conquer (all other animals); but if it leave the water, other animals will conquer it

Leave a Comment