குறள் 478

குறள் 478:

 

ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை
போகா றகலாக் கடை
மு.வ உரை:
பொருள் வரும் வழி (வருவாய்) சிறிதாக இருந்தாலும், போகும் வழி (செலவு) விரிவுபடாவிட்டால் அதனால் தீங்கு இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
வருமானம் அளவில் சிறிது என்றாலும் செலவினம் பெரிதாகாதபோது கேடு இல்லை.
கலைஞர் உரை:

எல்லை கடந்த செலவு இல்லாமல் இருக்குமேயானால் வரவு, குறைவாக இருப்பதால் கேடு எதுவும் விளைவதில்லை.


Kural 478


Aagaaru Alavitti Thaayinung Kedillai
Pokaaru Agalaa Kadai

Kural Explanation: Even though the income (of a king) be small, it will not cause his (ruin), if his outgoings be not larger than his income

Leave a Comment