குறள் 440

குறள் 440:

 

காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்
மு.வ உரை:
தன் விருப்பம் பிறர்க்கு தெரியாதபடி விருப்பமான வற்றை நுகர வல்லவனானால், பகைவர் தன்னை வஞ்சிப்பதற்காகச் செய்யும் சூழ்ச்சிகள் பலிக்காமல் போகும்.
சாலமன் பாப்பையா உரை:
தான் செய்ய எண்ணியவற்றைப் பிறர் முன்னதாகவே அறிந்துவிடாதபடி காத்தால், அவனை அழிக்க எண்ணும் பகைவர் எண்ணம் பழுதுபடும்.
கலைஞர் உரை:

தமது விருப்பத்தைப் பகைவர் அறிந்து கொள்ள முடியாமல் நிறைவேற்றுபவரிடம் அந்தப் பகைவரின் எண்ணம் பலிக்காமற் போய்விடும்.


Kural 440


Kaadhala Kaadhal Ariyaamai Uykkirpin
Edhila Edhilaar Nool

Kural Explanation: If (a king) enjoys, privately the things which he desires, the designs of his enemies will be useless

Leave a Comment