குறள் 426

குறள் 426:

 

எவ்வ துறைவ துலக முலகத்தோ
டவ்வ துறைவ தறிவு
மு.வ உரை:
உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ, உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்.
சாலமன் பாப்பையா உரை:
உலகத்துப் பெரியோர் எவ்வாறு வாழ்கின்றார்களோ, அவரோடு சேர்ந்து, தானும் அப்படியே வாழ்வது அறிவு.
கலைஞர் உரை:

உயர்ந்தோர் வழியில் உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ அதற்கேற்ப நடந்து கொள்வதே அறிவாகும்.


Kural 426


Evva Thuraivadhu Ulagam Ulagaththodu
Avva Thuraiva Tharivu

Kural Explanation: To live as the world lives, is wisdom

Leave a Comment