குறள் 404

குறள் 404:

 

கல்லாதான் ஒட்பங் கழியநன் றாயினுங்
கொள்ளார் அறிவுடை யார்
மு.வ உரை:
கல்லாதவனுடைய அறிவுடைய ஒருக்கால் மிக நன்றாக இருந்தாலும் அறிவுடையோர் அதனை அறிவின் பகுதியாக ஏற்றுக்கொள்ள மாட்டார்.
சாலமன் பாப்பையா உரை:
படித்தவர் முன் பேசினால் படிக்காதவரின் பெருமை குறைந்து போகும்.
கலைஞர் உரை:

கல்வி கற்காதவனுக்கு இயற்கையாகவே அறிவு இருந்தாலும்கூட, அவனைக் கல்வியில் சிறந்தோன் என்று அறிவுடையோர் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.


Kural 404


Kallaadhaan Otpang Kazhiyanan Raayinung
Kollaar Arivudai Yaar

Kural Explanation: Although the natural knowledge of an unlearned man may be very good, the wise will not accept for true knowledge

Leave a Comment