குறள் 369

குறள் 369:

 

இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னுந்
துன்பத்துள் துன்பங் கெடின்
மு.வ உரை:
அவா என்று சொல்லப்படுகின்ற துன்பங்களுள் பொல்லாதத் துன்பம் கெடுமானால் இவ் வுலகில் இன்பம் இடையறாமல் வாய்க்கும்.
சாலமன் பாப்பையா உரை:
ஆசை எனப்படும் பெருந்துன்பம் இல்லாது போனால், இன்பம் இடைவிடாமல் வரும்.
கலைஞர் உரை:

பெருந்துன்பம் தரக்கூடிய பேராசை ஒழிந்தால் வாழ்வில் இன்பம் விடாமல் தொடரும்


Kural 369


Indam Idaiyaraa Theendum Avaavennum
Thunbaththul Thunbang Kedin

Kural Explanation: Even while in this body, joy will never depart (from the mind, in which) desire, that sorrow of sorrows, has been destroyed

Leave a Comment