குறள் 321

குறள் 321:

 

அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்
மு.வ உரை:
அறமாகிய செயல் எது என்றால் ஒரு உயிரையும் கொல்லாமையாகும், கொல்லுதல் அறமல்லாத செயல்கள் எல்லாவற்றையும் விளைக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
அறச்செயல் எது என்றால், பிற உயிர்களைக் கொலை செய்யாது இருப்பதே; கொல்வது அனைத்துப் பாவங்களையும் தரும்.
கலைஞர் உரை:

எந்த உயிரையும் கொல்லாதிருப்பதே அறச்செயலாகும் கொலை செய்தல் தீயவினைகள் அனைத்தையும் விளைவிக்கும்.


Kural 321


Aravinai Yaadhenin Kollaamai Koral
Piravinai Ellaan Tharum

Kural Explanation: Never to destroy life is the sum of all virtuous conduct The destruction of life leads to every evil

Leave a Comment