குறள் 304

குறள் 304:

 

நகையும் உவகையுங் கொல்லுஞ் சினத்தின்
பகையும் உளவோ பிற
மு.வ உரை:
முகமலர்ச்சியும் அகமலர்ச்சியும் கொல்லுகின்ற சினத்தை விட ஒருவனுக்கு பகையானவை வேறு உள்ளனவோ?
சாலமன் பாப்பையா உரை:
முகத்தில் சிரிப்பையும், மனத்துள் மகிழ்ச்சியையும் கொன்றுவிடும் கோபத்தை விட வேறு பகையும் உண்டோ?
கலைஞர் உரை:

சினம் கொள்கிறவர்களுக்கு முகமலர்ச்சி மாத்திரமின்றி மனமகிழ்ச்சியும் மறைந்து போய் விடும்.


Kural 304


Nagaiyum Uvagaiyum Kollum Sinaththin
Pagaiyum Ulavo Pira

Kural Explanation: What other foe to man works such annoy?

Leave a Comment